Type Here to Get Search Results !

உலக சுற்றுலா தின விழா தருமபுரி அரசு கலை கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


உலக சுற்றுலா தினம்-2023 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா தருமபுரி அரசு கலை கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


உலக சுற்றுலா தினம்-2023 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா தருமபுரி அரசு கலை கல்லூரியில் இன்று (27.09.2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு (UN - World Tourism Organization) சார்பில் 1970 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 150 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்புதான் செப்டம்பர் 27 ஆம் நாளினை உலக சுற்றுலா தினமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 27ம் தேதி உலக சுற்றுலா தினமாக அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் மிக சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைப்படி தருமபுரி மாவட்டத்தில் இன்று (27.09.2023) சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் 2023 தருமபுரி அரசு கலை கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக பாரம்பரிய முறைப்படி விருந்தினர்களை வரவேற்று இனிப்பு வழங்கப்பட்டது. 


உலக சுற்றுலா தின விழா – 2023 தொடர்பாக தருமபுரி அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கிடையே “சுற்றுலாவும் பசுமை முதலீடுகளும்” (Tourism & Green Investments) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் இவ்விழாவின் தொடர்ச்சியாக கலைஞர் நூற்றாண்டு விழா தூய்மை பணி முகாம் வள்ளல் அதிமான் கோட்டத்தில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் திரு.கண்ணன் அவர்கள் தலைமையேற்று விழா பேரூரை ஆற்றினார். கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக திரு.பா.கதிரேசன், சுற்றுலா அலுவலர்(முகூபொ), தருமபுரி அவர்கள் சுற்றுலாத்துறை சார்பாக நன்றியுரை கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies