Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பென்னாகரத்தில் மிலாடி நபியை முன்னிட்டு முக்கிய வீதிகளின் வழியாக சுன்னத் ஜமாத் ஜாமியா மஜித் மற்றும் மீலாத் கமிட்டி சார்பில் நபிகள் புகழ் பாடும் பேரணி நடைபெற்றது.


பென்னாகரத்தில் மிலாடி நபியை முன்னிட்டு முக்கிய வீதிகளின் வழியாக சுன்னத் ஜமாத் ஜாமியா மஜித் மற்றும் மீலாத் கமிட்டி சார்பில் நபிகள் புகழ் பாடும் பேரணி நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் புனித விழாக்களில் ஒன்று மிலாடி நபி. இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளையே மிலாடி நபியாக உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 


இன்று வியாழக்கிழமை மிலாடி நபியை முன்னிட்டு பென்னாகரத்தில் சுன்னத் ஜமாத் ஜாமியா மஜித் மற்றும் மீலாத் கமிட்டி சார்பில் முத்தவல்லி தௌலத் பாஷா முன்னிலையில் மீலாத் கமிட்டி தலைவர் பத்ரு சௌகத் அலி தலைமையில் நபிகள் புகழ் பாடும் பேரணி இன்று நடைபெற்றது.


பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். பேரணியில் கலந்து கொண்ட  பெரியவர்கள் முதல் சிறுவர், சிறுமிகள் அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் ஜும்லி பீர் அலிப்பீர் கமிட்டியினர், யாரப் ஹஜ்ரத் கமிட்டியினர் உள்பட ஏராளமான இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


முடிவில் கூட்டுப் பிரார்த்தனை  (துவா) செய்து தப்ரூக் வழங்கப்பட்டது, பெரியவர்கள் முதல் சிறுவர் சிறுமிகள் அனைவருக்கும் விருந்து விழா குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.


- செய்தியாளர் இர்பான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884