தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பஞ்சப்பள்ளி போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏரி பஞ்சப்பள்ளி கிராமத்தில் லட்சுமி (வயது. 55) என்பவரது பெட்டிகடையில் குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த பஞ்சப்பள்ளி போலீசார் அவரிடமிருந்து 500 ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்தனர்.