Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே பூலாப்பட்டி ஆற்று பாலம் அருகே சொகுசு கரை மடக்கி காருடன் 5 கிலோ தங்க நகை கடத்தல்; காரிமங்கலம் போலீசார் விசாரனை.


கோவை மாவட்டம் ராஜ வீதியை சேர்ந்த நகை வியபாரி பிரசன்னா (வயது. 40)  இவர் கோயமுத்தூரில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்றிரவு தனது நகை கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு  புதிய நகைகளை பெங்களுரில்  வாங்கிக் கொண்டு நண்பர்களான  விஜயகுமார் (வயது.46) சுரேஷ்குமார் (வயது.45) ஜெய்சன் (வயது.40) ஆகியோர் உடன் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

இரவு சுமார் 12 மணி அளவில் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலம் மீது கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் பிரசன்னா வந்த காரை வழிமறித்து காரில் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்து காருடன் 5 கிலோ நகையை கடத்தி சென்றனர்.


இதுகுறித்து காரிமங்கலம் போலீசில் இன்று காலை பிரசன்னா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர், தகவலறிந்த மாவட்ட எஸ்பி . ஸ்டீபன் ஜேசுபாதம் காரிமங்கலம் ஸ்டேசனில்  நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies