அதிமுக மாநாட்டில் கனிமொழி பற்றி அவதூறு பாடல் எடப்பாடி பழனிசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் தி மு க மகளிர் அணியினர் புகார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

அதிமுக மாநாட்டில் கனிமொழி பற்றி அவதூறு பாடல் எடப்பாடி பழனிசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் தி மு க மகளிர் அணியினர் புகார்.


தருமபுரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் திருமதி கவிதா மோகன்தாஸ் தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று  (23.08.23) தருமபுரி மாவட்ட  காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களிடம் புகார் மனு அளித்தனர். 

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அஇஅதிமுக மாநாட்டில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களையும் மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும், அநாகரிகமான முறையில் பேசியும் பாட்டுப்பாடியும் கொலை மிரட்டல் விடுத்தும் உள்ளனர். 


அதே போல் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களை பெண் என்று கூட பாராமல் அவரை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக அவமானப்படுத்தும் விதமாகவும் அவரைப் பற்றி ஆபாசமும், அவதூறாகவும் பேசி பாடல் பாடினர். இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கண்டு ரசித்து கைத்தட்டி சிரித்தனர்.  இந்த செயல் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. 


அதிமுகவின் அனைத்து தலைவர்கள் மற்றும் தற்போதைய அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடுகளானது தனிமனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் மற்றும் உண்மைக்கு மாறான தனிப்பட்ட முறையில் ஆபாசமாகவும், அவதூராகவும்,  அநாகரிகமாகவும் நடந்துக்கொண்டனர்.


மேலும்  பெண்மையை கேவலப்படுத்தும் விதமாகவும்,  நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டுள்ளனர். எனவே அவதூறு பரப்பி பாடல் பாடிய நபரையும் அதனை கேட்டு ரசித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி. கவிதா மோகன்தாஸ் மற்றும் கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad