அரூரில் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

அரூரில் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.


அரூரில் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது இப்பயிற்சியில் விவசாயிகள்  நெல் நிலக்கடலை மற்றும் மரவள்ளிக் கிழங்குகளில்  அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  ஸ்பிக் உர நிறுவனத்தின்  மாநில விற்பனை மேலாளர் ஜெயபாலன், உதவி பொதுமேலாளர் ராஜேந்திரன் சேலம் மண்டலம் மேலாளர் முத்துசாமி வேளாண் உதவி இயக்குனர் திருமதி சரோஜா மற்றும் அலுவலர்கள் மாதவன்ராஜா அர்ஜுனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர்.


பின்னர் அரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்பிக் நிறுவனத்தில் சார்பில் நோட்டு புத்தகம் பேக் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்கள்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துளசி அக்ரோ ட்ரேடர்ஸ் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad