சந்திராயன் -3 வெற்றியை குழந்தைகளுடன் கொண்டாடிய மை தருமபுரி அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

சந்திராயன் -3 வெற்றியை குழந்தைகளுடன் கொண்டாடிய மை தருமபுரி அமைப்பினர்.


இஸ்ரோ அமைப்பின் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி மேற்கொள்ள சந்திராயன் மூன்று விண்கலம் கடந்த மாதம் நிலவிற்கு ஏவப்பட்டது. உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த தருணத்தை இன்று வெற்றிகரமாக நிலவில் சந்திராயன் -3  தரை இறங்கியது. சர்வதேச அளவில் இந்தியாவை தலை நிமிரச் செய்த இந்த செயல்பாட்டை இந்தியா முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்த வெற்றியை மை தருமபுரி சமூக அமைப்பின் மூலம் குழந்தைகளுடனும் சேர்த்து கொண்டாடினார், சந்திராயன் மூன்று விண்கலத்திற்காக உழைத்த இஸ்ரோ அமைப்பினருக்கும், அனைத்து விஞ்ஞானிகளுக்கும், நல் உள்ளங்களுக்கும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர் 

கருத்துகள் இல்லை:

Post Top Ad