Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தருமபுரி மாவட்டத்தில் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தால் திறமையான குழந்தைகளை பாராட்டி, தன்னலமற்ற இளம் துணிச்சலான குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க மாண்புமிகு இந்திய குடியரக தலைவர் அவர்களால் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.


பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது நாட்டில் விளையாட்டு, சமூகசேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை (ம) கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமுதாயத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய, முன்மாதிரியாக இருக்கும், விதிவிலக்கான திறமைகள் மற்றும் சிறந்த சாதனைகள் செய்த இளம் குழந்தைகளுக்கு மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் அவர்களால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.


இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 18 வயதுக்கு உட்பட்டவராகவும், இந்திய குடிமகனாகவும் மற்றும் இந்தியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இவ்விருதிற்கு தகுதியான குழந்தைகள் https://awards.gov.in என்ற ஆன்லைன் போர்ட்டல் வாயிலாக மட்டும் 31.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்,  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies