தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான "மகசூல் பெருக்கம் – மகிழும் விவசாயி" என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டு, ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.227.00 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள்.
இத்திட்டத்தின்கீழ் முக்கிய இனமாக தரிசு நில தொகுப்பு மேம்பாடு செயல்படுத்தப்படுகிறது. 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, தரிசு நில தொகுப்புகளாக பதிவு செய்யப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நில தொகுப்பில் ஆழ்துளை / திறந்தவெளி கிணறு அமைத்து நுண்ணீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் மர / பழ மரங்களின் நீர் தேவைக்கு ஏற்றவாறும், விவசாயிகளின் பாசன பரப்பிற்கு ஏற்றவாறும் நீர் பங்கீடு செய்யப்படுகிறது. வேளாண்மைத்துறையின் மூலம் ஒன்றிய, மாநில நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இதர திட்டங்களை ஒருங்கிணைத்து 80% திட்ட ஒதுக்கீட்டினை தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உழவர் நலன் சார்ந்த
இதர துறைகளான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம்
மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வளத்துறை, எரிசக்தித்துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல்
மற்றும் கதர்த்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில்
ஒருங்கிணைத்து செயல்பட்டு கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 57 கிராமங்கள்
தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 57 கிராமங்களில்
ஏரியூர் வட்டாரம், தொண்ணகுட்டஅள்ளி கிராமம் மற்றும் நாகமரை கிராமம், பென்னாகரம்
வட்டாரம்,
வட்டுவனஅள்ளி
கிராமம்,
நல்லம்பள்ளி
வட்டாரம்,
மானியதஅள்ளி
கிராமம்,
காரிமங்கலம்
வட்டாரம்,
பிக்கனஅள்ளி
கிராமம் ஆகிய கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் உள்ளடக்கிய விவசாயிகளை ஒருங்கிணைத்து 5 தரிசு நிலத்தொகுப்புகள்
தேர்ந்தெடுக்கப்பட்டு, வேளாண் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
வருகின்றது.
தரிசு நிலங்களை மேம்படுத்த அனைத்து தொகுப்புகளிலும்
ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு நுண்ணீர் பாசனக்கருவிகள் நிறுவப்பட்டு தோட்டக்கலைத்துறை
மூலம் பழச்செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள 81.64 ஏக்கர் பரப்பளவில் தற்பொழுது வரை 32.76 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு மீதமுள்ள 48.88 ஏக்கர் பரப்பில் பழச்செடிகள் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று
வருகிறது. மொத்தம் ரூ.52.33 இலட்சம்
மதிப்பீட்டில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, இதன்
மூலம் 59 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.கி.சாந்தி
இஆப.,
அவர்கள்
தெரிவித்தார்கள்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயனடைந்த தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியதள்ளி கிராமத்தில் வசித்துவரும் திரு.கி.கோவிந்தன் அவர்கள் தெரிவித்ததாவது, எனது பெயர் கோவிந்தன். என்னுடைய அப்பா பெயர் கிட்டன். நான் மானியதள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 1.57 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் விவசாயம் செய்வதற்கு மழையை எதிர்பார்த்து இருக்கும் சூழிலில் இருந்தோம். நான் விவசாயம் இல்லாத காலத்தில் கூலி வேலைக்கு செல்லும் நிலையிலும், அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கு கூட போதிய வருமானமின்றியும், வறுமையில் வாழ்ந்து வந்தோம்.
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த
வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ்
நாங்கள் இருக்கும் மானியதஅள்ளி கிராமத்தில் 16.29 ஏக்கர்
கொண்ட தரிசு நிலத் தொகுப்பு கண்டறியப்பட்டு, எங்களது தொகுப்பில் 10
விவசாயிகள்
உள்ளனர். இப்பகுதியில் நிலத்தடி நீர்
ஆய்வு செய்யப்பட்டு 800 அடி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. மேலும் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தும்
நோக்கத்தில் நுண்ணீர் பாசனக்கருவிகள் அமைக்கப்பட்டு, தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை மூலம் எனது 1.57 ஏக்கரில் கொய்யா
பழச்செடிகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
புன்செய் நிலமாக எங்கள் நிலமானது தற்போது போதிய நீர் வளம் பெற்று கொய்யா,
எலுமிச்சை
போன்ற பழச்செடிகளை சாகுபடி செய்யும் வகையில் உள்ளது. இதன் மூலம் போதிய
வருமானமின்றி வறுமையில் இருந்த எங்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்ளும்
வகையில் போதிய வருமானம் கிடைத்து வருகின்றது.
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "மகசூல் பெருக்கம் – மகிழும் விவசாயி"
என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த
வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தினார்கள்.
இத்திட்டதின்
கீழ் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதன்
மூலம் என்னை போன்ற ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு
எங்களது வேளாண் பெருகுடிகள் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என
திரு.கோவிந்தன்
அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த
வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ் எங்கள்
நிலங்களில் சாகுபடியினை அதிகரிக்க வேளாண் துறை சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல்,
பண்ணை
குட்டைகள் அமைத்தல், கைதெளிப்பான, விசைதெளிப்பான் உள்ளிட்ட
வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்,
தோட்டக்கலை
துறை மூலம் எலுமிச்சை மற்றும் கொய்யா செடிகள் வழங்கப்பட்டு சாகுபடி
செய்யப்படுகிறது. என்னுடைய நிலத்திலும் எலுமிச்சை செடிகள்
நடப்பட்டு,
சாகுபடி
செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் போதிய வருமானமின்றி வறுமையில்
இருந்த எங்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் வகையில் போதிய வருமானம்
கிடைத்து வருகின்றது.
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களை போன்ற ஏழை விவசாயிகளின் நலனை
கருத்தில்கொண்டு, வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கவும்,
விவசாயிகளின்
வறுமையை போக்கவும், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த
வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி,
எங்களை
போன்ற ஏழை விவசாயிகளின் வறுமைய போக்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என திரு.பழனிச்சாமி
அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். விவசாய பெரு மக்களின் வாழ்வாதாரம் பெருகவும், வாழ்க்கை தர மேம்படவும் தனி அக்கறை கொண்டு வேளாண் வளரச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மேலும் ஒரு மணிமகுடம் சூட்டும் திட்டம் என்றால் அது மிகையாகாது.