தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு வட மாநில தொழிலாளர் விஜய் (22) என்பவர் பாணிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று மாலை மது போதையில் பாணிபூரி கடைக்கு வந்த இளைஞர்கள் 3 பேர் பாணிபூரி வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்ததால், தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் மது போதையில் இருந்த 3 இளைஞர்களும் பாணிபூரி கடையை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி நாசம் செய்தனர். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்