Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் வட மாநில பாணிபூரி தொழிலாளியை மது போதையில் தாக்கும் இளைஞர்கள் - வீடியோ காட்சி வைரல்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு வட மாநில தொழிலாளர் விஜய் (22) என்பவர் பாணிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.


நேற்று மாலை மது போதையில் பாணிபூரி  கடைக்கு வந்த இளைஞர்கள் 3 பேர்  பாணிபூரி வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்ததால், தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் மது போதையில் இருந்த 3 இளைஞர்களும்   பாணிபூரி கடையை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி நாசம் செய்தனர். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies