தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பாமக மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொது குழு உறுப்பினர் கே.எம்.பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆ.அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வி.எம்.சேகர், பெ.தேவேந்திரன், மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் தி.வாசுநாயுடு, மாவட்ட பொருளாளர் கு.சரவணகுமாரி ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு தலைவர் கே.இ.கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சதாசிவம் ஆகியோர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்டத் தலைவர் மு.செல்வகுமார், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மு.பாலாஜி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் எம்.ஆர்.சண்முகம், மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.வேடி, சாமிகண்ணு, மாவட்ட பொறுப்பாளர் இராஜவேல், மாவட்ட மகளிர் சங்க தலைவர் பெரியம்மாநாகு, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் பெ.சரவணன், கி.துரை, ர.குமார், சீ.முருகன், க.துரை, மா.சக்திவேல், வை.சிலம்பரசன், ரா.அசோக்குமார், மு.ராஜசேகர், அ.கண்ணன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, பேரூர் தலைவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பாலக்கோடு ராயக்கோட்டை ஒசூர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு பகுதி குண்டுக்கல்நகர் அருகே அமையவிருக்கும் சுங்கச்சாவடியானது, பாளையம்புதூர் சுங்கச்சாவடியில் இருந்து 35 கிலோ மீட்டருக்கு குறைவாக உள்ளதால் இப்பகுதியில் சுங்கச்சாவடி அமைப்பதை கைவிட்டு தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லையில் அமைக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இச்சுங்கச்சாவடியை மாற்றி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விரைவில் பல்வேறு வகையில் போராட்டம் நடத்துவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்கு சாவாடிகளிலும் களப் பணியாளர்களை நியமனம் செய்து, தேர்தல் பணிகளை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
பாமக தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கனவு திட்டமான தும்பலஅள்ளி அணைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் எண்ணேகொல்புதூர் நீர்பாசன கால்வாய் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக