மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற இரா.கேசவக்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மை தருமபுரி அமைப்பினர்.
தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் இடைநிலைப் பள்ளியின் நேர்முக உதவியாளராக இருந்த திரு.இரா.கேசவக்குமார் அவர்கள் தற்போது பொள்ளாச்சி மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கேசவமூர்த்தி அவர்களின் பணி சிறப்பை பாராட்டி மை தருமபுரி அமைப்பின் சார்பாக தகடூர் மனிதநேய விருதை தகடூர் அமுதப் பெருவிழா அன்று வழங்கப்பட்டது. அவரது ஆசிரிய பணியை சிறப்பாக பணியாற்றி தற்போது கோவை- பொள்ளாச்சி மாவட்ட இடைநிலை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம், மை தருமபுரி மகளிர் அமைப்பின் சார்பாக ஆசிரியர் பிரேமா, சமூக சேவகி அம்பிகா, தென்றல், ரக்சனா சபரி ஆகியோர் அய்யா அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக