கொல்லஅள்ளி புதூர், ஐய்மன்னன் கொட்டாய், மொன்னையன் கொட்டாய், நரசிங்கபுரம், கோம்பை, மெய்யன்கொட்டாய், கடத்தூரான் கொட்டாய், ஜாலிக்கொட்டாய், ராஜாதோப்பு போன்ற கிராமங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் இக்கிராமத்தின் வழியாக தருமபுரி நகரப்பகுதிக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
தற்போது மொடக்கேரி கிராமம், ஜல்லி கிரசர் பகுதியில் புதியதாக அரசு மதுபான கடை துவங்குவதை அறிந்து இப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டாஸ்மாக் வட்டாட்சியர், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலகங்களில் இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
இரவு நேரத்தில் மதுபான பாட்டில்களை கடையில் இறக்க உள்ளதாக தகவலறிந்த 100 க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் இரவு முழுவதும் காவல் இருந்தனர். இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக