சுதந்திர தின கிராம சபைக்கூட்டம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் 15.08.2023 அன்று நடைபெற உள்ளது, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையர் அவர்களது அறிவுரைகள்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தின கிராம சபைக்கூட்டம் 15.08.2023 அன்று காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள்.
கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இக்கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது :-
- கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்
- கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்
- தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்
- இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்
- அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல்
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல்
- ஜல் ஜீவன் இயக்கம்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
- தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) – சுகாதாரம் குறித்து விவாதித்தல்
- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் – ஊரகம் குறித்து விவாதித்தல்
- மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள்திட்டம்
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல்
- தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் பாரத்நெட் பகுதி-11 திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிலுள்ள 12525 கிராம ஊராட்சிகளுக்கும் ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் 1 GBPS அதிவேக இணைய வசதி வழங்கிட நிறுவப்பட்டுள்ள உபகரணங்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதித்தல்.
- தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம். திட்டம்
- 75- ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்வினையெட்டி கிராம சபை கூட்டத்தில் நாட்டின் சுதந்திரத்தில் பங்கு பெற்ற உள்ளூர், மாவட்ட /மாநில சுதந்திர போரட்ட தியாகிகளின் பங்களிப்பு மற்றும் தியாகங்களை நினைவு கூற வேண்டும்.
- இதர பொருட்கள் ஏதேனும் இருப்பின் கிராம சபையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.