உலகமே எதிர்பார்த்த சந்திரயான்-3, விக்ரம்லேண்டர் நேற்று சந்திரனில் தரையிறங்கியது. இதை இந்திய தேசமே கொண்டாடியது. உலகமே வியப்பாக பார்த்தது. இந்த சாதனைபுரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் விதமாகவும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் தருமபுரி மாவட்டம் நந்தி நகரில் அமைந்துள்ள கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன்-NGO அலுவலகத்தில் அதனை சார்ந்த நிர்வாக குழுவினர் அனைவரும் தேசியக்கொடி ஏந்தி ஆரவாரம் தெரிவித்தனர்.
அனைவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்வில் கிரஸ்ட் இந்தியா பவுண்டேசனை சார்ந்த பொம்மிடி முருகேசன், சசிக்குமார், தேவகி, அன்பு, நற்சுவை சுகுமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்
.gif)

