தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கலை அடுத்த ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் பென்னாகரம் வட்டாட்சியர் செளகத்அலி , பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு ஒன்றிய தலைவர் அருள்மொழி, பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மற்றும் அப்பள்ளியினை சார்ந்த ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக