பசுமை தாயக தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சாமிசெட்டிப்பட்டியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 ஜூலை, 2023

பசுமை தாயக தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சாமிசெட்டிப்பட்டியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடும் விழா தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைப்பெற்றது, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான  ஜுலை 25-ந் தேதி  பசுமை தாயக் மரக்கன்றுகள் நடும் நாளாகவும் பா.ம.க.வினர் மற்றும் பசுமை தாயக அமைப்பினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் சாமிசெட்டிபட்டி  பொதுமக்களுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும். நோக்குடன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார் அப்போது எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது , பாகலஹள்ளி ஊராட்சி சவுளூர் ஏரிக்கரையில் 20 வகையான பறவைகளுக்கு பலன் தரக்கூடிய மற்றும் நிழல் தரக்கூடிய 500 மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பனை விதைகள் சாமிசெட்டிபட்டி கிராமத்தில்  நடவு செய்யப்பட்டுள்ளன, இவ்வாறு அவர் கூறினார். 


இந்நிகழ்ச்சியில் பாமக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் ,பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் மாது,மாவட்ட துணை செயலாளர்கள் தமிழரசன், சரவணன்,  தங்கதுரை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி. வெங்கடேஷ். முத்துகுமார், ராமசந்திரன், பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் காமராஜ், பச்சாக்கவுண்டர், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad