இளைஞர்களின் எழுச்சி நாயகன், ஏவுகணை நாயகன், இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக இருந்த ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்தியாவில் பல தலைவர்கள் வாழ்ந்திருந்தாலும், உலகமெங்கும் போற்றப்படும் மாபெரும் தலைவராக வாழ்ந்தவர் அப்துல் கலாம் அவர்கள், அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் எத்தனை கோடி ஆண்டுகள் கடந்தாலும் மறையாது. இந்நிகழ்வில் கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த் முதல்வர் முனைவர் பரஞ்ஜோதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சதீஸ் குமார், பெருமாள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகள் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக