இதற்கு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமை வகித்தார். தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் இதில் பங்குபெற்ற ஆசிரியர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய விளக்கங்களும், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை பற்றியும் காணொளியுடன் விளக்கி கூறினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவர்கள் பொதுசாலையில் வாகனத்தை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. எனவே இதை தடுக்கும் பொருட்டு தருமபுரி மாவட்டத்தில் விபத்தை குறைக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய கையேடு அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது என்பதை கண்காணித்து மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அந்தந்த பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் சாலை பாதுகாப்பு கிளப் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாரந்தோறும் ஒவ்வொரு பள்ளி வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட விவரங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படுவதால் இனி எதிர்வரும் காலங்களில் விபத்துக்கள் கண்டிப்பாக தருமபுரி மாவட்டத்தில் குறையும். நடைபெற்றது. இதற்கு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமை வகித்தார் தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் இதில் பங்குபெற்ற ஆசிரியர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய விளக்கங்களும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை பற்றியும் காணொளியுடன் விளக்கி கூறினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவர்கள் பொதுசாலையில் வாகனத்தை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. எனவே இதை தடுக்கும் பொருட்டு தருமபுரி மாவட்டத்தில் விபத்தை குறைக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய கையேடு அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது என்பதை கண்காணித்து மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அந்தந்த பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் சாலை பாதுகாப்பு கிளப் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாரந்தோறும் ஒவ்வொரு பள்ளி வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட விவரங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படுவதால் இனி எதிர்வரும் காலங்களில் விபத்துக்கள் கண்டிப்பாக தருமபுரி மாவட்டத்தில் குறையும்.
.gif)

