பாலக்கோடு அனைத்து வணிகர் சங்க தலைவர் திரு. முத்து, பொருளாளர் திரு.மாணிக்கம் மற்றும் செயலாளர் திரு.சரவணன் உள்ளிட்டோர் முன்னிலையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் வரவேற்புடன், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். பானுசுஜாதா, எம்.பி., பி.எஸ்., தலைமையில் உணவு பாதுகாப்பு துறை பயிற்சி பார்ட்னர் சக்சம் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி பயிற்சி பயிற்சியாளர் திருமதி. தாரணி அவர்களால் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியாளர் திருமதி.தாரணி, அவர்கள் உணவு கையாளும் வணிகர்கள் தன் சுத்தம், சுற்றுப்புற சுத்தம், பொருள் மேலாண்மை, கையாளுதல், பூச்சிகளை கட்டுப்படுத்துதல் உணவை சரியாக தேக்கி வைத்தல், சமைத்த உணவை இரண்டு மணி நேரத்துக்குள்ளாக உபயோகப்படுத்துதல் மற்றும் மூலப்பொருட்களும், உபகரணங்களும் தரமாக தூய்மையாகவும் இருத்தலை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் சமைத்த உணவு, சமைக்காத உணவுகள் மூடிய நிலையில் பராமரிக்கவும், கழிவுகள் முறையாக அகற்றும் செய்யவதுடன் குப்பை அகற்றும் கூடைகள் மூடிய நிலையில் உள்ளதையும் உறுதிப்படுத்ததுடன். குடிநீர் சுகாதாரமான நீராக இருத்தல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் நீரும், குடிப்பதற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் லேபிள் குறித்தும் காண வேண்டிய அம்சங்களான உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், உட்காரணிகள், அலர்ஜி காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், சைவ மற்றும் அசைவகுறியீடு, நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்டவை கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும், உணவுப் பொருட்களில் கலப்படம் வீட்டளவில் கண்டுபிடிக்க கூடிய தேயிலை, தேன், பால், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு மற்றும் அயோடின் உப்பு , அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு , அயோடின் உப்பின் அவசியம் குறித்து நேரடியாக உணவு பொருள்களைக் கொண்டு நேரடி செயல் விளக்கமாக செய்து காட்டி விழிப்புணர்வுடன், அனைத்து உணவு வணிகர்களும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று முறையாக புதுப்பித்து நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்க கேட்டுக்கொண்டார்.
அனைத்து வணிகர் சங்க தலைவர் முத்து, உணவு வணிகர்கள் நடமாடும் சாலையோர துரித உணவு கடைக்காரர்கள் என அனைவரும்உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதுடன் நேர்மையாகவும் செயல்பட கேட்டுக் கொண்டார். திரு. சரவணன் அவர்களும் பெரிய கடை சிறிய கடை என்று இல்லாமல் அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வணிகர் சங்கம் ஒத்துழைப்பு நல்கும் என தெரிவித்தார்.
இந்த பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட உணவு வணிகர்கள் பங்கேற்றனர். பயிற்சி முகாம் ஏற்பாடுகளை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் செய்திருந்தார். இறுதியாக அக்ரி. பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி உரையாற்றினார். முகாம் ஏற்பாடுகளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக