ஆடிப்பெருக்கு விழா கொண்டாட பாதுகாப்பு ஏற்பாடு எம்எல்ஏ ஜி.கே.மணி ஒகேனக்கல்லில் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 ஜூலை, 2023

ஆடிப்பெருக்கு விழா கொண்டாட பாதுகாப்பு ஏற்பாடு எம்எல்ஏ ஜி.கே.மணி ஒகேனக்கல்லில் ஆய்வு.


ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளதால், பொதுமக்கள் அச்சமின்றி ஒகேனக்கல்லுக்கு வரலாம் என ஜி.கே. மணி எம்எல்ஏ தெரிவித்தார். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தினை பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து பார்வை யிட்ட பிறகு செய்தியாளர்களி டம் கூறியதாவது, ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவது குறித்து அண்மையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் புனித நீராட லட்சக்கணக்கான பொது மக்கள் வருவர் என எதிர்பார்க் கப்படும் நிலையில் குடிநீர், கழிப் பிடம், அமருமிடம். சுந்தமான உணவு, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, தங்குமிடம் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஒகேனக்கல்லில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற் கொள்ள உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அடிப் பெருக்கு விழாயில் அச்சமின்றி கலந்துகொள்ளலாம்.


ஓகேனக்கல் பகுதியில் உள்ள பரிசல் ஒட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் சமையல் கடை உரிமையாளர்கள் ஆகியோர்களிடம் ஆடிப்பெருக்கு விழாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து தொழிலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒகேனக்கலில் நடைப்பெற்றது. ஓகேனக்கல்  ஊட்டமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட சுற்றுலாத் துறை அலுலவர் பாவமுருகன் தலைமை வகித் தார். சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜி.கே. மணி கலந்துகொண்டார்.


இதில், பரிசல் ஓட்டிகள், சமையல், தொழிலா ளர்கள் மசாஜ், கடை உரிமையாளர்கள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஆகியோரிடம் குடிநீர். சுத்தமான உணவு, கழிப்பிடம், முக்கிய இடங்களில்  மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதி போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது, ஆடிப் பெருக்கு விழாவில் அரசின் நலத் திட்டங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான முகாம்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இதில் மருத்துவ இணை இயக்குநர் சாந்தி. வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா ஒன்றியக் குழு தலைவர் கவிதா. வட்டாட்சியர் சௌகத் அலி ஒகேளக்கல் வளச்சரக அலுவலர் ராஜ்கு தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் உதயசங் கர். வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திர பாபு, ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர் முருகன, அனைத்து தொழிலாளர் கள் கலந்துகொண்டனர்.


ஆடிப்பெருக்கு விழாவுக்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்பு பளரியில் ஈடுபடுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை விளம்பரப் பலகைகள், ஆழமான பகுதிகளுக்கு செல்லாதவாறு பாது காப்புப் பணியில் காவல் துறையினரை ஈடுபடுத்த வேண்டும்.


ஓகேனக்கல் சுற்றுலாத் தலத்தை உலகத்தரம் வாய்ந்தவை யாக மேம்படுத்துவதற்காக ரூ. 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாத நிலை உள்ளதால், செயற்கை நீர்வீழ்ச்சி அமைத்தும் குழந்தைகள் மற் றும் வெளிநாட்டு சுற்றுலாப் டாய ணிகளை கவரும் வகையில் பல் வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும் வகையிலும் இந்த மேம்பாட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


இந்த நிகழ்வுகளின் போது, பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் வெண்ணிலா அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad