இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி முன்னிலை வகித்தார்.வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மாதேஷ் வரவேற்று பேசினார்.வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் வாசுகி சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்தார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக் கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் அப்துல்காதர் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வின் நிறைவாக ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தொழில் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் அ.இம்தியாஸ் நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ , மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக