தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் சேர்க்கை அதிகமானதால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இருக்கைகள் இல்லாமல் மாணவிகள் நெருக்கமாகவும், தரையில் அமர்ந்தும் படித்து வந்தனர்.
இதனை அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 இருக்கைகளை இன்று பள்ளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுண்சிலர் காவேரி, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தலைமை ஆசிரியை சசிகலாதேவி,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

