Type Here to Get Search Results !

Dr.AMR கிரிக்கெட் கோப்பை : லீக் போட்டியில் நல்லூனூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி.


அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் Dr.AMR கிரிக்கெட் கோப்பை  மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டிகள் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி  மைதானத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கி கடந்த ஜந்து நாட்களாக நடைபெற்று வந்தன. சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நல்லூனூர் Green Devils மற்றும் தாசம்பட்டி New Bullet அணிகள் மோதின. 


டாஸ் வென்று தாசம்பட்டி அணியினர் முதலில் பந்து வீசினர். இறுதிப்போட்டி நான்கு ஓவர்களை கொண்டது.முதலில் பேட் செய்த நல்லூனூர் அணியினர் 32 ரன்களை எடுத்தனர். இரண்டாவதாக களமிறங்கிய தாசம்பட்டி அணியினர் 30 ரன்களை மட்டும் எடுத்தனர், இப்போட்டி இறுதி பந்து வரை சென்றது. இப்போட்டியில் நல்லூனூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது . பென்னாகரம் அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இரண்டு அணிகள் மாவட்டத்தில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளது.


இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் துரை சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய தலைவர் வெற்றி, வன்னியர் சங்க பொறுப்பாளர் எம்.பிரேம்குமார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், நடுவர்கள் விளையாட்டு வீரர்கள் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies