உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 மே, 2023

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம்   இராஜவூரில்  உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மணி அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2022-2023  சென்ற ஆண்டிற்கான வரவு செலவு விவரங்களை ஊராட்சி மன்ற செயலாளர் ரங்கநாதன் வாசித்தார் .பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின்னர் கல்வி சார்ந்த திட்டங்களை பற்றி சின்னப்பள்ளத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி அவர்கள் பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்.

பின்னர்  அவர்  பேசுகையில் பள்ளி இடைநிற்றல் இல்லாத ஊராட்சியாக மாற்ற வேண்டும் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு இளம் வயது திருமணங்கள் தடுப்பதை பற்றி எடுத்து கூறினார். பின்னர் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை  அளித்தனர் .வீடு இல்லாதவர்களுக்கு பிரதமர் முதலமைச்சர் வீடு வேண்டியும் தெரு விளக்கு புதியதாக சிமெண்ட் சாலை அமைத்தல் மற்றும்  பலுதாகி உள்ள சாலைகளை  சீரமைக்க கோரியும ஏராளமான கோரிக்கை மனுக்களை அந்த ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அளித்தனர். 


இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அண்ணா நரசிம்மன், நாகனூர் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள், மக்கள் தேடி மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், கூட்டுறவு துறை சார்ந்தவர்கள்,நியாய விலை கடை ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள்  ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் இறுதியில் ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் அனைவருக்கும் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad