Type Here to Get Search Results !

தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் புது நன்மை உறுதி பூசுதல் சிறப்பு திருப்பலி.


உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்கள் 7 அருட்சாதனங்களை பெறுவது வழக்கம். அதில் மிகவும் முக்கியம் மற்றும் சிறப்பு வாய்ந்தது புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் அருள் சாதனங்கள் ஆகும் இதற்காக 13 வயதுக்கு மேல் உள்ள சிறுவர் சிறுமிகள் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக மறைக்கல்வி என்னும் கிறிஸ்துவின் வாழ்க்கை முறை பற்றியும் ஜெபங்கள் மற்றும் தவங்கள் செய்வது குறித்து நன்றாக கற்று அறிந்து பின்பு அவர்களுக்கு இந்த அருட்சாதனங்கள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தர்மபுரி பாரதிபுரத்தில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் புதிய பேராலயத்தில் புது நன்மை உறுதி பூசுதல் சிறப்பு திருப்பலி மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.புது நன்மை உறுதி பூசுதல் சிறப்பு திருப்பலியில் மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களின்  தலைமையில் சிறுவர் சிறுமிகள் வெள்ளை நிற உடை அணிந்து கைகளில் வெள்ளை நிற மெழுகு திறனை ஏந்தி பயபக்தியுடன் திருப்பலியில் பங்கு பெற்றனர் மேலும் இந்த நிகழ்வில் 32 சிறுவர் சிறுமிகளுக்கு பொது நன்மை உறுதி பூசுதல் நடைபெற்றது.

இதில் ஆயர் அவர்கள் ஒவ்வொரு குழந்தைக்கு நெற்றியில் பிளாஸ்மா இன்னும் புனிது தைலத்தில் சிலுவை இட்டு ஆசி வழங்கினார் இந்த சிறப்பு திருப்பலியில் முதன்மை பங்கு தந்தை அருள்ராஜ். மற்றும் தந்தையர்கள் . அருள் சகோதரிகள். பங்கு பேரவையினர் அன்பின் பொறுப்பாளர்கள். பங்கு இறைமக்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies