![]() |
கோப்பு படம். |
இந்த முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ.1,00,000/- ரொக்கம் பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். அதன்படி 2022ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2023 அன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பான கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

- 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள்/பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது 31.03.2023 அன்று 35 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும்.
- கடந்த நிதியாண்டில் (2022-2023) அதாவது 01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்படவேண்டும்)
- விண்ணப்பதாரார்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
- மத்திய 7 மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள் 77 கல்லூரிகள் 7 பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
- விண்ணப்பதாரருக்கு உள்ளூர் சமுதாய மக்களிடம் செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
மேற்காணும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுபெற 15 முதல் 35 வயதிற்குட்பட்ட தகுதிவாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் https://sdat.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் : 31.05.2023 மாலை 4.00 மணி எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக