தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு, மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல்) விதிகள் 1999-ன்படி தருமபுரி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் உறுப்பினர்களைக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்றைய நிலையில் உள்ள உள்ளாட்சிகளின் உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு இன்றைய தினம் வாக்காளர்களின் பொதுவான தகவலுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு மாவட்ட ஊராட்சியின் 18 உறுப்பினர்களும், தருமபுரி நகராட்சியின் 33 உறுப்பினர்களும், அரூர் பேரூராட்சி, கடத்தூர் பேரூராட்சி, காரிமங்கலம் பேரூராட்சி, பாலக்கோடு பேரூராட்சி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, பென்னாகரம் பேரூராட்சி, மாரண்டஅள்ளி பேரூராட்சி, கம்பைநல்லூர் பேரூராட்சி, பி.மல்லாபுரம் பேரூராட்சி ஆகிய 10 பேரூராட்சிகளின் 159 உறுப்பினர்களும் என மொத்தம் 210 உறுப்பினர்களை உள்ளடக்கிய இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மிரியாம் ரெஜினா, மாவட்ட ஊராட்சி செயலர் கருணாநிதி, புள்ளியியல் துறை அலுவலர் ஆதிமூலம், துணை வட்டார வளாச்சி அலுவலர் (நிர்வாகம்) முத்தையன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக