Type Here to Get Search Results !

அரூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் திடீர் ஆய்வு.


வேளாண்மை உழவர் நலத் துறை வேளாண்மை இணை இயக்குனர் திருமதி விஜயா அவர்கள் அரூர் வட்டாரத்தில்  இன்று  திடீர் ஆய்வு செய்தார்கள் இந்த ஆய்வு கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அவர்கள் அரூர் வட்டாரம் தீர்த்தமலை மற்றும் ஆண்டியூர்  கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தென்னை விநியோகம் ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும்  கிரையன்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் விவரங்கள் பதிவேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.



மேலும் கீரைப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் கிரையன்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பதிவேற்றம் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் பின்னர் தேவராஜ் பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் மக்காச்சோளம் செயல் விளக்கம் ஆய்வு மேற்கொண்டார்கள் மேலும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தில் சின்னா குப்பம் கிராமத்தில் ரோட்டவேட்டர் வினியோகம் குறித்து  ஆய்வு மேற்கொண்டார்கள் மேலும் மாலகபாடி புழுதியூர் நாரணாபுரம் ஆகிய கிராமங்களில் கிரையன்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் விவரங்கள் பதிவேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரூர் துணை வேளாண்மை அலுவலர் திரு கோவிந்தராஜன், மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் திரு சிவன், திரு ரசூல், திரு ரமேஷ் மற்றும் திரு வினோத்குமார், திரு ஜெயக்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies