
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி அரசு கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர் கு. சிவப்பிரகாசம் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இலக்கியங்களின் வாயிலாக தமிழர்களின் மரபு பண்பாடு கலாச்சாரங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கவுரை ஆற்றினார். தமிழ் மொழியினை காப்பது என்பது தமிழர் இனத்தை காப்பதற்கு சமம் என்றும் தமிழ் மொழியின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல அனைவரும் உறுதி எடுப்போம் என்று சிறப்புரை ஆற்றினார்.
தமிழ் மன்றம் சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா, பட்டிமன்றம், கதைச்சொல்லுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ப. பிரேம்குமார் மற்றும் மன்ற உறுப்பின மாணவர்கள் செய்திருந்தனர்.
.gif)

