தொடர் மழை பெய்ததால் தேங்காய் உற்பத்தி அதிகரித்த நிலையில் பாலக்கோடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15டன் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் விலை குறைவாக இருப்பதினால் மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் 108.60 ரூபாய்க்கு அதிகாரிகள் கொள்முதல் செய்தனர். உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொப்பரை தேங்காய் கொள்முதல் நடைபெறும் எனவும் ஒரு மாதத்திற்குள் 100 முதல் 200 டன் வரையிலும் அதிகபட்சமாக ஆயிரம் டன் வரையிலும் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் எனவும் விவசாயிகள் பயனடையுமாறு வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.
கொப்பரை தேங்காய் கொள்முதலின் போது வேளாண்மை மேற்பார்வையாளர் பிரியா, வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வம், சத்யா, முனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
.gif)

