தர்மபுரி நெசவாளர் காலனியில் எழுந்தருளியுள்ள ஓம்சக்தி மாரியம்மன் திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி விழா நடந்துவருகிறது.
இரண்டாம் நாளான இன்று காலை 9 மணிக்கு ஓம் சக்தி மாரியம்மன் கரக அழைப்பு நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணி அளவில் பக்தர்கள் கோவிலில் கூழ் ஊற்றி பொங்கல் இட்டனர். இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
நாளை 3ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு பக்தர்களின் மாவிளக்கு எடுக்கும் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையும், செங்குந்த அருள் நெறி மன்றம், செங்குந்த சிவநேய செல்வர்கள், கலைத் தென்றல் இஞைர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக