Type Here to Get Search Results !

தருமபுரியில் விவசாய கண்காட்சி; ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்கம் சார்பில் 5வது ஆண்டாக நடந்து வருகிறது.


தருமபுரியில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்கம் சார்பில் விவசாய கண்காட்சி துவங்கியது, தருமபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் இக்கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியை தமிழக விவசாயிகள் சங்க தலைவர் எஸ். ஏ. சின்னசாமி குத்துவிளக்கு ஏற்றியும் ரிப்பன் வெட்டியும் துவங்கி வைத்தார்.


கண்காட்சியில், விவசாயம் சார்ந்த பண்ணை கருவிகள், அறுவடை இயந்திரங்கள், உழவு எந்திரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள், இயற்கை உரங்கள், ஆர்கானிக் உணவுகள், செடி வகைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.


கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லியப்பன் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். இக்கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies