தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காட்டுப் பகுதியில் சாலை ஓரம் நின்ற யானையிடம் வணக்கம் சொல்லி யானை காலில் விழுந்து வணங்கி இரண்டு கைகளில் தூக்கி யானையிடம் சரண்டர் ஆவது போல போக்கு காட்டிய மீசை முருகேசன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
சமூக வலைதளத்தில் வீடியோ பரவியதை அடுத்து பென்னாகரம் வனத்துறையினர் திமுக பிரமுகரான மீசை முருகேசனை அழைத்து விசாரணை செய்தனா் விசாரணையில் வனத்துறையினா் மீசை முருகேசனுக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனா்.

.gif)


