Type Here to Get Search Results !

மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூன்றாம் ஆண்டு சேவை துவக்க விழா.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக கடந்த பத்து ஆண்டுகளாக தருமபுரியில் பல சேவைகளை செய்து வருகின்றனர். இரத்ததானம், உணவு வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் போன்ற சமூக சேவைகளை செய்து வருகின்றனர். 

கொரோனா ஊரடங்கில் பல குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் பலரின் உதவியால் சேவை செய்துவந்தனர், ஏப்ரல் 2021 தமிழ் புத்தாண்டு அன்று முதல் தினந்தோறும் ஏழை மக்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் பணியை தொடங்கினர், இந்த சேவை இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 


உணவு வழங்க சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்ட சுதந்திர போராட்ட தியாகி சிவகாமி அம்மாள் அவர்கள் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார். அப்போது பொது மக்கள் பலரும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர். மை தருமபுரி அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து வரும் CKM நிறுவனத்தின் CEO மாதேஷ், பத்திர எழுத்தாளர் கணேசன், PSB டிபார்ட்மெண்ட் நிறுவன உரிமையாளர் சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். உணவு வழங்கும் நிகழ்ச்சியை மை தருமபுரி அமைப்பின் தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884