Type Here to Get Search Results !

கனரக வாகனங்களை மிஞ்சி அதிக பாரம் ஏற்றும் ஆட்டோக்கள்- விபத்து ஏற்படும் முன்பு விதிமுறை மீறும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய நகர பகுதிகளில் இருந்து  சுமார் 500 க்கும் மேற்பட்ட நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக சென்றுவர ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.  


தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் ஆட்டோக்களில் சுமார் 15 நபர்கள் ஏற்றிச் செல்லுகின்றனர். சிலர் கனரக சரக்கு வாகனங்களை மிஞ்சும் அளவிற்கு தக்காளி, காய்கறி, சிமெண்ட், பூசா மூட்டை, குடிநீர் குழாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் ஏற்றி செல்லுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


ஆட்டோக்களை  செல்போன் பேசிக்கொண்டே ஒரு கையில் பிடித்து கொண்டு இயக்குவது, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹரன்களை பயன்படுத்துவது, உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டு வரும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884