Type Here to Get Search Results !

முதல்வர் 70 வது பிறந்த நாளையோட்டி பாலக்கோட்டில் மாநில அளவிலான கைபந்து போட்டியை திமுக மாவட்ட செயலாளர் துவக்கி வைப்பு.


பாலக்கோட்டில் முதல்வரின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான இரவு-பகல் கை கைப்பந்து போட்டியை பாலக்கோடு பேரூராட்சி தலைவரும் பேரூர் கழகச் செயலாளருமான பி.கே.முரளி தலைமையில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் துவக்கி வைத்தார். இப்போட்டியில் பாலக்கோடு நண்பர்கள் வாலிபால் அணி, திருச்சி போலிஸ் அணி, கோவை, சேலம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி போலிஸ் அணி, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ளும் இப் போட்டிகள் இரவு பகல் ஆட்டமாக மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வக்கில் மணி, பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், டி.எஸ்.பி மனோகரன், சிந்து, இன்ஸ்பெக்டர் தவமணி, முன்னாள் மாவட்ட து. செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி ரவி, மாவட்ட பிரதநிதி செந்தில், மோகன், பெரியசாமி, ஜெயந்திமோகன், சக்திவேல், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், குமார், பேரூராட்சித் துணைத் தலைவர் இதயத்துல்லா, பாம்பே சக்திவேல், ராஜபார்ட் ரங்கதுரை பேரூர் கழக அவைத்தலைவர் அமானுல்லா ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884