இப்பள்ளியின் சேர்மேன் எவரெஸ்ட் இரா. முனிரத்தினம் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாக அலுவலர் எம்.ராஜா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கு விசாரணை உதவி இயக்குனர் ஆர். சரவண பொய்கை, காட்டுமன்னார்கோயில் ஜிகே கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜிகே.அருண், தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஐ. ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள் இரா. அரசாங்கம், பொ.மு. நந்தன், சொல்லின் செல்வம், தகடூர் புத்தக பேரவை தலைவர் தொழிலதிபர் எம். ஸ்டாலின், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சி. சம்பத், பத்திரிக்கையாளர் பொம்மிடி முருகேசன், தருமபுரி மாவட்ட சமூக ஆர்வலர்களான சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஏ. சரவணன், இந்தியன் பில்லர்ஸ் நிறுவனர் வினோத் நரசிம்மன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் ஆர். சதீஷ்குமார், கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின் தலைவர் டி.எஸ் சசிக்குமார், விபார்யூ நிறுவனர் டாக்டர் வி. பிரகாஷ், பிஎஸ்பி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சுரேஷ்குமார், சமூகத்தின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் எம். சந்துரு, நற்சுவை நாட்டுச் சர்க்கரை நிறுவனத்தைச் சேர்ந்த நற்ச்சுவை ஆர். சுகுமாரன், இந்தியன் பில்லர்ஸ் சோழ பாண்டியன், வனவிலங்குகள் ஆர்வலர் டி. ராம்குமார், மாஸ்டர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர். துரை, ஓகே. கிருஷ்ணமூர்த்தி அதியமான் கோட்டைராமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் கடத்தூர் பேரூராட்சி துணை தலைவர் ஆர். வினோத், உழவர் பேரியக்க தலைவர் சி.முத்துசாமி, கடத்தூர் கிளை நூலகர் சி.சரவணன், அதிமுக நகர செயலாளர் சந்தோஷ், கே.தமிழ்மணி, ஆர். முருகன் பேரூராட்சி கவுன்சிலர் காமாட்சி சிவகுமார், ஊர் கவுண்டர் கந்தன், மந்திரி கவுண்டர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பள்ளியின் துணைத் தலைவர் பூவிழி முனிரத்தினம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பி.சதானந்தம் நன்றி கூறினார்.
முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.