அதில் கூறப்பட்டுள்ளதாவது, கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதங்கள் விதிப்பது தற்பொழுது அதிகரித்து வருகிறது. சாலை ஓரம், பெட்ரோல் பங்குகள், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்துக் கொண்டு என்ன குற்றம் என்றே கூறாமல் ஜெனரல் அபன்ஸ் என்று அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்படுகிறது. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைகவசம் அணியவில்லை போன்ற முரணான காரணங்களுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் சம்பந்தமாக வாகன உரிமையாளர், வாகனத்திற்கான காலாண்டு வரி, தகுதிச் சான்றிதழ், பர்மிட்கள் பெறுவதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே இதுபோன்று ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்து, வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து குற்றம் இருப்பின் அபராதம் விதிக்கும்பட்சத்தில் ஓட்டுநரின் கையொப்பத்துடன் என்ன குற்றம், ஓட்டுநர் பெயர், ஓட்டுநர் உரிம எண்ணையும் ரசீதில் குறிப்பிட வேண்டும்.
எனவே இம்மாதிரியான ஆன்லைன் அபராத முறையை மறுபரிசீலனை செய்து, நசிந்துவரும் லாரித் தொழிலை காத்து வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும் கேட்டுக்கொள்கிறோம். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.