தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு புதிய ரகங்கள் சாகுபடிக்கு கொண்டு வருதல் சம்பந்தமான செயல் விளக்கம்.
பையர் நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. இச்செயல் விளக்கத்தில் நிலக்கடலையில் அதிக மகசூல் மற்றும் அதிக எண்ணெய் சத்துக்கள் நிறைந்த புதிய ரகமான கதிரி லிபாக்சி 18 12 சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது செயல் விளக்கத்தில் உதவி வேளாண்மை அலுவலர் திரு தண்டபாணி மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சண்முகம் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்இதில் அதியமான்வேளாண் கல்லூரி பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.gif)

