
தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையான தொப்பூர் மலைப் பாதையில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடமான தொப்பூர் ஆஞ்சநேயர்கோவில் 2 –வது வளைவு பகுதியில் சுமார் 40 மீட்டர் அளவிற்கு கூடுதலாக Metal crash barrier guard பொருத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதை தொடர்ந்து 2023ம் ஆண்டிற்கான சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் 2வது வளைவு பகுதியில் சுமார் 40 மீட்டர் அளவிற்கு கூடுதலாக Metal crash barrier guard பொருத்தப்பட்டது.
மேற்கண்ட ஆய்வில் தொப்பூர் மலைப்பகுதிகளில் கடந்த 2019 –ம் ஆண்டில் ஏற்பட்ட 23 உயிரிழப்பு விபத்துக்களை காட்டிலும் 2022 –ம் ஆண்டு 9 உயிரிழப்பு விபத்துக்களாக குறைந்துள்ளதாக தெரிவித்து, தொப்பூர் மலைப் பகுதிகளில் இது போன்று பாதுகாப்பு நடவடிக்கைள் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வினை தொடர்ந்து சுங்கச்சாவடி அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்களின் செயல்பாடுகளை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மற்றும் சுங்கச்சாவடி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.