Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.


தை அமாவாசை நாளில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். 


இதனால் அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.


இந்த நிலையில் தை அமாவாசையான இன்று ஒகேனக்கல் காவேரி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கல் முதலைப் பண்ணை நாகர்கோயில் பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். 


பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884