Type Here to Get Search Results !

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கொட்டியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கொட்டிய இழிவினும் இழிவான செயலை கண்டித்தும், தமிழகத்தில் தொடரும் சாதி வெறி வன்கொடுமைகளை கண்டித்தும், தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் தொடந்து நிலவும் வேங்கைவயல் உள்ளிட்ட வன்கொடுமைகளை தடுத்து நிறுத்து,   குடிநீரில் மலத்தை கொட்டிய சாதிவெறி வன்முறை கும்பலை உடனே கைது செய், ரெட்டிஅள்ளி கிராமம் உள்ளிட்ட அ.தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட வீட்டுமனைகளை சீர்படுத்தி பயனாளிகளுக்கு உடனே ஒப்படை, தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடு, தாட்கோ நிறுவனத்தை சுயநிதியுடன் கூடிய தனி வங்கி உருவாக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, ஜானகிராமன் சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் நீல சந்திர குமார், கட்சி நிர்வாகிகள் மின்னல் சக்தி, பாண்டியன், சாக்கன், சர்மா விஜயலட்சுமி, கப்பல் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884