சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்ததன் எதிரொலியாக தர்மபுரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தர்மபுரி ரிசோசர்ஸ் சொசைட்டி சுய உதவிக் குழு, மகளிர் சுய உதவி குழுக்களுடன் சேர்ந்து சிறுதானிய பொங்கல் விழா நடத்தியது.
டிஆர்சிஎஸ் தொண்டு நிறுவனம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பொங்கல் திருவிழாவை நடத்தியது. திணை, பாசிப்பயிறு, நாட்டு சக்கரை பயன்படுத்தி சிறுதானிய பொங்கல் வைக்கப்பட்டது. மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் தொனி கூட்டமைப்பு தலைவர் ஆனந்தன், ரோட்டரி சங்க தலைவர் சக்திவேல், தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி, முதுநிலை மேலாளர் ரமேஷ், பேங்க் ஆப் பரோடா முதுநிலை மேலாளர் தர்மலிங்கம், சமூக செயல்பாட்டாளர் ராஜகோபால், டிஆர்சிஎஸ் இயக்குனர் ரவிச்சந்திரன், ரியல் ஃபவுண்டேஷன் இயக்குனர் செந்தில்ராஜா மற்றும் டிஆர்சிஎஸ் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

