Type Here to Get Search Results !

தருமபுரியில் ஆரவாரமாய் தொடங்கிய ஜல்லிக்கட்டு சோகத்தில் முடிந்தது.


தருமபுரியில் தமிழ்நாடு ஜல்லிகட்டு‌பேரவை மற்றும் அதியமான்‌ ஜல்லிகட்டு  பேரவை‌இணைந்து மூன்றாம் ஆண்டாக  ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக‌ வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்‌‌ கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் இந்தாண்டு மூன்றாவது ஆண்டாக‌ ஜல்லிக்கட்டு போட்டி, தடங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில், இன்று தருமபுரி மாவட்ட‌ ஆட்சி தலைவர் சாந்தி முன்னிலையில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ‌கொடி அசைத்து‌ துவக்கி வைத்தார். 


அதனையடுத்து முதலில் மண்டு மாரியம்மன் கோவில் காளை வாடி‌வாசல் வழியாக‌ திறந்து விடபட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, திருச்சி, கோவை, சேலம், சிவகங்கை‌, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 750காளைகள்‌, 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாடிவாசல் வழியாக‌ திறக்கபட்ட‌ காளைகள் சீறிபாய்ந்தன. அதனை ஆர்வத்துடன் இளைஞர்கள் அடக்கினர். சில காளைகள் யாருக்கும் பிடி கொடுக்காமல் சீறிபாய்ந்தன. 

இந்த‌ ஜல்லிகட்டு போட்டியை காண தருமபுரி மாவட்டம் அல்லாது அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள் பெண்கள் என பலர் கண்டு களித்தனர். வாடிவாசல் அருகில் மருத்துவ குழுக்கள், தீயணைப்பு மீட்பு பணித் துறை, மற்றும் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர்.  


இதில் முதல் பரிசாக இரு சக்கர வாகனத்தை 19 காளைகளை அடக்கிய இரண்டு பேரும், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக 16 காளைகளை அடக்கிய இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டனர். சுமார் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் படு காயமடைந்தனர்.


நெகிழ வைத்த துயர சம்பவம். 

இந்த ஜல்லிக்கட்டில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திரெளபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் இளைய மகன் கோகுல் ( வயது 15). இவர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு தனது மாமா ஹரியுடன் வந்தார். காளைகள் வெளியே வரும் இடத்தில், காளை மாடு கோகுலின் வலது புறமாக வயிற்றில் குத்தியது. இதில் படுகாயமடைந்த இவர், ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 


ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த கோகுலின் உடலுறுப்புகளை தானம் செய்வதாக அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததால், அதற்கான பணிகளில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884