Type Here to Get Search Results !

அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளை மீட்டுத் தர வேண்டும்; பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 96 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த 96 பேர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது இலவச வீட்டு மனைகளை மீட்டு தர கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக அரசானது, கடந்த 1992 ஆம் ஆண்டு,  மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை மூலம் வீடு கட்ட இலவச வீட்டு மனை பட்டாவை (0.03சென்ட்) பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 96 பேருக்கு வழங்கியது.  ஆனால் இது நாள் வரை தங்களுக்கு மேற்படி வீட்டுமனையை அளந்து காட்டவில்லை. அதனால் அந்த இடத்தில் எங்களால் வீடு கட்டி வசிக்க முடியாமல் கடந்த 30 ஆண்டுகளாக கஷ்டபட்டு வருகிறோம்.


இந்நிலையில் தற்போது பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கோவிந்தன் ஆகியோர், சில அரசு அதிகாரிகள் துணையுடன் எங்களது வீட்டு மனைகளை வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறைகேடாக பட்டா வழங்க தற்போது ஏற்பாடு செய்து வருகிறார்கள். எனவே அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை முறைகேடாக விற்பனை செய்ய முயலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களது பெயருக்கு கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884