அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக அரசானது, கடந்த 1992 ஆம் ஆண்டு, மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை மூலம் வீடு கட்ட இலவச வீட்டு மனை பட்டாவை (0.03சென்ட்) பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 96 பேருக்கு வழங்கியது. ஆனால் இது நாள் வரை தங்களுக்கு மேற்படி வீட்டுமனையை அளந்து காட்டவில்லை. அதனால் அந்த இடத்தில் எங்களால் வீடு கட்டி வசிக்க முடியாமல் கடந்த 30 ஆண்டுகளாக கஷ்டபட்டு வருகிறோம்.

இந்நிலையில் தற்போது பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கோவிந்தன் ஆகியோர், சில அரசு அதிகாரிகள் துணையுடன் எங்களது வீட்டு மனைகளை வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறைகேடாக பட்டா வழங்க தற்போது ஏற்பாடு செய்து வருகிறார்கள். எனவே அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை முறைகேடாக விற்பனை செய்ய முயலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களது பெயருக்கு கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.