Type Here to Get Search Results !

தருமபுரி தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்.


தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் வேலையற்ற இளைஞர்களுக்கு (ஆண், பெண், திருநர்கள்) மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (21.01.2023) அன்று நடைபெற உள்ளது.

எனவே மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 21.01.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நல்லம்பள்ளி ஒன்றியம் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், B.E படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண், பெண், திருநர்கள்/திருநங்கைகள்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884