தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 74வது குடியரசு தின விழா நிகழ்ச்சி இன்று கடவுள் வாழ்த்து பாடலுடன் துவங்கியது, தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் எம் வடிவேலன் (வ.ஊ) அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தேசிய கீதத்துடன் குடியரசு தின விழா கொண்டாட்டம் நிறைவு பெற்றது. பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கே ரங்கநாதன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் அற்புதம் அன்பு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.