இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டலம் சார்பில் இன்று (26.01.2023) அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மண்டல பொது மேலாளர் திரு.சு.ஜீவரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டலதில் சிறப்பாக பணியாற்றிய 32 ஓட்டுநர்கள், 30 நடத்துநர்கள், 18 தொழில்நுட்ப பணியாளர்கள், 5 அலுவலக பணியாளர்கள் 4 மேற்பார்வையாளர்கள் மற்றும் 1 கிளை மேலாளர் என மொத்தம் 90 போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் மண்டல பொது மேலாளர் திரு.சு.ஜீவரத்தினம் அவர்கள் வழங்கி கவுரவித்தார். முன்னதாக பெண் பணியாளர்களுக்கான கோலப்போட்டி, பணியாளர்களின் துணைவியாருக்கான கோலப்போட்டி மற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கான கோலப்போட்டி, கவிதைபோட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சாண்றிதழ்களை வழங்கி குடியரசு தினவிழா சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) திரு.க.ராஜராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, உதவி மேலாளர் (பணியாளர்) திரு.கோ.புருசோத்தமன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.