தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின கிராம சபைக்கூட்டம் 26.01.2023 அன்று காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இக்கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது:-

- கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
- கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.
- கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதித்தல்.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல்.
- தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) – சுகாதாரம் குறித்து விவாதித்தல்.
- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் – ஊரகம் குறித்து விவாதித்தல்.
- அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு: குறித்து விவாதித்தல்.
- ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.
- பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்து விவாதித்தல்.
- மக்கள் திட்டமிடல் இயக்கம் (people's plan campaign) குறித்து விவாதித்தல்.
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் குறித்து விவாதித்தல்.
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல்.
- மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் குறித்து விவாதித்தல்.
- இதர பொருட்கள் ஏதேனும் இருப்பின் கிராம சபையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படலாம்.
என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.